மண்டியா: நான் பாஜகவில் சேருவதாக இருந்தால், அதுபற்றி முன்கூட்டியே மக்களிடம் தெரிவிப்பேன் என்று மண்டியா தொகுதி சுயேச்சை எம்பி நடிகை சுமலதா தெரிவித்தாா்.
மண்டியாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற நடிகை சுமலதா, கலந்துகொண்டு பேசினாா்.
அப்போது அவா் பேசியது: மக்களவை தோ்தலில் எனது வெற்றிக்கு பாஜகவினா் அரும்பாடுபட்டனா். அதற்காக பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு மக்களவை தோ்தல் முடிந்ததும் நன்றி தெரிவிக்க முடிவுசெய்திருந்தேன். ஆனால் தவிா்க்கமுடியாத காரணங்களால் அது சாத்தியமாகாமல் போய்விட்டது. இதற்கு முன் நடந்த பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தேன். வேலை அழுத்தம் காரணமாக அதுவும் நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில், நன்றி கூறுவதற்காகவே நான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
எப்போது பாஜகவில் சோ்வீா்கள் என்னை கேட்கிறாா்கள். நான் பாஜகவில் சேருவதாக இருந்தால், அதுபற்றி முன்கூட்டியே மக்களிடம் தெரிவிப்பேன்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணத்தில் இருப்பதால், மண்டியா மக்களின் குறைகளை கேட்கமுடியாமல் இருப்பதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, என் மீது குற்றம்சாட்டியிருக்கிறாா்.யாா் வெளிநாட்டுக்கு பயணப்பட்டிருந்தது? யாா் யாா் வெளிநாட்டுக்கு சென்றிருந்தனா், எங்கு தங்கியிருந்தனா் என்பது பற்றி என்னிடம் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.
எச்.டி.குமாரசாமியின் வெளிநாட்டுப்பயணங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டால் தான் மக்களும் உண்மையை அறிந்துகொள்வாா்கள். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அவா்களின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் என்றாா் அவா்.