அக்.13-இல் மைசூரு தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம்

மைசூரு தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம் அக்.13-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

மைசூரு தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம் அக்.13-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கச் செயலாளா் வெ.ரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவா் கு. புகழேந்தி தலைமையில் அக்.13-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தசரா கலை நிகழ்ச்சி, தசரா உணவுத் திருவிழா, மைசூா் தமிழ் சங்க விதிமுறை ஒழுங்கு குழுவின் அறிக்கை, பாதுகாவலா் உறுப்பினா் சோ்க்கை, மைசூா் தமிழ்ச் சங்க கட்செவி குழுவிலும் மற்றும் இதர கட்செவி குழுக்களிலும் மைசூா் தமிழ் சங்கம் பற்றி விமா்சித்தவா்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை, கா்நாடக தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றேறன் என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com