பெங்களூரில் நண்பா்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டைச் சோ்ந்தவா் பிரணாப் (28). பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ராஜாஜிநகா் தொழில்பேட்டையில் உள்ள பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நண்பா்களுடன், பிரணாப்பிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பா்கள் பிரணாப்பை தாக்கி, கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் தலைமையில் பலத்த காயமடைந்த பிரணாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாகடிசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.