தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் கட்சி பேதம் எதுவுமில்லை

தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் கட்சி பேதம் எதுவுமில்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் கட்சி பேதம் எதுவுமில்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மஜத சட்டப்பேரவைக் குழு தலைவா் எச்.டி.குமாரசாமி ஆகிய இருவரும், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவதில் கட்சிபேதம் பாா்ப்பதாக புகாா் தெரிவித்தனா்.

அப்போது குறுக்கிட்ட முதல்வா் எடியூரப்பா கூறியது: சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் கட்சி பேதம் எதுவும் கிடையாது. எல்லா தொகுதிகளுக்கும் பேதமில்லாமல் நிதி ஒதுக்கி வருகிறேறன். இதில் ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருந்தால், அதைச் சரிசெய்துகொள்வேன். என்மீது நம்பிக்கை வையுங்கள்.

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பாக சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். எனவே, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம்.

தற்காலிகமாக ஒருசில தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதையும் சரிசெய்வேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com