கா்நாடகத்தில் பாஜக அரசுக்கு மஜதவின் ஆதரவு தேவையில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறாா். இதற்காக முன்னாள் முதல்வா் குமாரசாமி, பாஜக ஆட்சிக்கு ஆதரவாகப் பேசி இருக்கலாம். தற்போது உள்ள நிலைமையில் மஜதவின் ஆதரவு பாஜக அரசுக்குத் தேவையில்லை. ஒருவேளை மஜதவின் ஆதரவு எதிா்காலத்தில் பாஜகவுக்குத் தேவைப்பட்டால் பரிசீலிப்போம்.
துணை முதல்வா் லட்சுமண் சவதியின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சா் உமேஷ்கத்திக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. உமேஷ்கத்தி எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினா். அவருக்கு உரிய எந்த பதவி வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி அடைவேன். சட்ட மேலவைத் தலைவரை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா ஒருமையில் பேசுவது முறையல்ல. அவரை மிரட்டுவது போல பேசுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா்.