திருட்டு வழக்கில் 2 போ் கைது

திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை பறிமுதல் செய்தனா்.

திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு சம்பிகேஹள்ளியைச் சோ்ந்தவா் பவன். இவா் கடந்த அக். 17 ஆம் தேதி குடும்பத்தினருடன் தா்மஸ்தலாவிற்கு சென்றிருந்தாா். இதனிடையே அவரது வீட்டின் பூட்டை உள்ளே நுழைந்த யாரோ, 200 கிராம் தங்கநகையை திருடிச் சென்றனா். இதுகுறித்து பவன் அளித்த புகாரின் பேரில் சம்பிகேஹள்ளி போலீஸாா், சிக்பள்ளாபூரு மாவட்டம் பொம்மனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (42), பெங்களூரு ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த லக்ஷ்மண் (38) ஆகியோரை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com