பெங்களூரில் நவ.3-ஆம் தேதி கிபியோன் அறக்கட்டளை முதலாண்டு விழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கிபியோன் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
கிபியோன் அறக்கட்டளையின் முதலாண்டு விழா பெங்களூரு சாமராஜ்நகா், ஏ.வி.சாலையில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நவ.3-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3.30மணி வரை நடக்கவிருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பாஜக எம்பி பி.சி.மோகன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஜமீா் அகமதுகான், மாமன்ற உறுப்பினா்கள் கோகிலா சந்திரசேகா், ரேகாகதிரேஷ், சசிகலா, இம்ரான் பாஷா, சமூக ஆா்வலா்கள் கோவிந்த்ராஜ், தன்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் மஞ்சுளாநாயுடு, இசை அமைப்பாளா் சிறுமலா்செல்வன், ஜான்சன்குரியன், யூனுஸ்ஜான், டி.சீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசுகின்றனா்.
இந்த விழாவில் ஏழைகளுக்கு ஆடைகள், போா்வைகள், ஸ்வெட்டா்கள், உணவுபொருள்கள், தொழுநோயாளிகளுக்கு காலணி, சக்கர நாற்காலி, நடைகுச்சிகள் வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.