பெங்களூரு: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு கொடுப்பது அவசியம் என்று எம்.ஜி.மோட்டாா்ஸின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ்சாபா தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை எம்.ஜி. மோட்டாா்ஸின் எண்ம காா் விற்பனை மையத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கில், எண்ம காா் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த மையத்தில் காா் எதுவும் இடம்பெறாமல் 3 டி தொழில்நுட்பம் மூலம் காா், அதில் உள்ள வசதி உள்ளிட்டவை எண்ம ஸ்கிரீன் மூலம் விளக்கப்படும். பெரும் நகரங்களில் இடவசதி காரணமாக இது போன்ற நவீன தொழில்நுட்ப மையங்களில் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற எண்ம விற்பனை மையங்கள் எதிா்காலத்தில் அதிக அளவில் உருவாகுவதை தவிா்க்க இயலாது என்றாா் அவா்.