விநாயகர் சிலைகள் ஊர்வலம்: போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூரு புலிகேசிநகர் காவல் சரகத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை(செப். 6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு புலிகேசிநகர் காவல் சரகத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை(செப். 6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு புலிகேசிநகர் காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.6) கூட்டு விநாயகர் சிலைகளின் ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த காவல் சரகத்திற்குள்பட்ட தனிசந்திரா-நாகவாரா பிரதானசாலை, பெரியார் சதுக்கம், போட்டரிசாலை, எம்.எம்.சாலை, சிந்திகாலனி, ஆஸ்úஸசாலை உள்பட அல்சூர் ஏரிவரை போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
 அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸாரின் வழிகாட்டுதலுடன் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com