பெங்களூரு புலிகேசிநகர் காவல் சரகத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை(செப். 6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு புலிகேசிநகர் காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.6) கூட்டு விநாயகர் சிலைகளின் ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த காவல் சரகத்திற்குள்பட்ட தனிசந்திரா-நாகவாரா பிரதானசாலை, பெரியார் சதுக்கம், போட்டரிசாலை, எம்.எம்.சாலை, சிந்திகாலனி, ஆஸ்úஸசாலை உள்பட அல்சூர் ஏரிவரை போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸாரின் வழிகாட்டுதலுடன் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.