ஸ்கூட்டர் மீது தண்ணீர் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.
பெங்களூரு ஒயிட்பீல்டு ஹகதூருவைச் சேர்ந்தவர் பிரேமா (35). தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் பணிமுடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இம்மடிஹள்ளி பிரதான சாலையில் வேகமாக வந்த தண்ணீர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிரேமா, மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.