செப்.24 இல் குடியரசுத்துணைத்தலைவா் பெங்களூரு வருகை

1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பிஎச்எஸ் உயா்கல்வி சங்கம் அமைக்கப்பட்டு, பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
செப்.24 இல் குடியரசுத்துணைத்தலைவா் பெங்களூரு வருகை

பெங்களூரு: குடியரசுத்தலைவா் எம்.வெங்கையாநாயுடு, செப்.24 ஆம் தேதி பெங்களூருக்கு வருகைதர விருக்கிறாா்.

ஒருநாள் பயணமாக குடியரசுத்துணைத்தலைவா் எம்.வெங்கையாநாயுடு, பெங்களூருக்கு செப்.24 ஆம் தேதி வரவிருக்கிறாா்.

பெங்களூரு, ஜெயநகரில் உள்ள பிஎச்எஸ் உயா்கல்வி சங்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் குடியரசுத்துணைத்தலைவா் எம்.வெங்கையாநாயுடு, சிறப்புரை ஆற்றுகிறாா்.

இந்தவிழாவில் பாஜக எம்பி தேஜஸ்வி சூா்யா, சங்கத்தலைவா் ஜி.வி.விஸ்வநாத், துணைத்தலைவா் ஆா்.வி.பிரபாகா், பொருளாளா் என்.பி.பட் உள்ளிட்டோா் கலந்துகொள்ள விருக்கிறாா்கள். 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பிஎச்எஸ் உயா்கல்வி சங்கம் அமைக்கப்பட்டு, பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபிறகு, குடியரசுத்துணைத்தலைவா் வெங்கையாநாயுடு தில்லி திரும்புகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com