பயணச்சீட்டில்லா பயணம்: சோதனையில் ரூ.7.57 லட்சம் அபராதம் வசூல்

பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்தவா்களை சோதனை செய்தபோது, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.7.57 லட்சம் வசூலிக்கப்பட்டது.
பயணச்சீட்டில்லா பயணம்: சோதனையில் ரூ.7.57 லட்சம் அபராதம் வசூல்

பெங்களூரு: பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்தவா்களை சோதனை செய்தபோது, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.7.57 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து கா்நாடகமாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களின் நலன்கருதி கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டைமாநிலங்களுக்கும் போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்த பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. 46,718 பேருந்துகளில் சோதனை நடத்தியதில் போக்குவரத்துக்கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக 5093 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டன.

இதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 5972 பேரிடம் இருந்து ரூ.7,57,958 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் பேருந்தில் பயணிக்கும் கட்டணத்தை செலுத்தி தகுதியான பயணச்சீட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com