ஐஏஎஸ் அதிகாரிகள்பணியிட மாற்றம்

 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரும், புதிதாக இடமாற்றம் செய்துள்ள பணியிடமும் வருமாறு: பல்லவி ஆக்ருதி-கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி; பூவிதா-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, மைசூரு; எச்.வி.தர்ஷன்-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, கோலார்; பண்ட்வே ராகுல் துக்காராம்-ஆணையர், கலபுர்கி மாநகராட்சி; கங்குபாய் ரமேஷ் மனகர்-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, ஹாவேரி.
இவர்களைத் தவிர, பெங்களூரு மாநகராட்சியின் கூடுதல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.அன்புக்குமார், டி.ரன்தீப் இருவரும் இனி பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு ஆணையர்களாக அழைக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com