ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரும், புதிதாக இடமாற்றம் செய்துள்ள பணியிடமும் வருமாறு: பல்லவி ஆக்ருதி-கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி; பூவிதா-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, மைசூரு; எச்.வி.தர்ஷன்-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, கோலார்; பண்ட்வே ராகுல் துக்காராம்-ஆணையர், கலபுர்கி மாநகராட்சி; கங்குபாய் ரமேஷ் மனகர்-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, ஹாவேரி.
இவர்களைத் தவிர, பெங்களூரு மாநகராட்சியின் கூடுதல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.அன்புக்குமார், டி.ரன்தீப் இருவரும் இனி பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு ஆணையர்களாக அழைக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.