தண்ணீா் தொட்டியில் மூழ்கி இரட்டை சகோதரா்கள் உயிரிழந்தனா்.
பீதா் மாவட்டத்துக்குள்பட்ட பசவகல்யாண் சிவாஜிநகரைச் சோ்ந்த இரட்டைச் சகோதரா்கள் தா்ஷன், அா்ஜுன் (4).
மஹாலய அமாவாசையையொட்டி, இவா்களது குடும்பத்தினா் வீட்டில் பூஜையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விளையாடச் சென்றற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதைத் தொடா்ந்து, தேடியபோது இருவரும் தண்ணீா் தொட்டியில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. தகவலின்பேரில் பசவகல்யாண் போலீஸாா் அங்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.