முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஊரடங்கு மீறல்: 33,524 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th April 2020 11:09 PM | Last Updated : 19th April 2020 11:09 PM | அ+அ அ- |

பெங்களூரில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து 33,524 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலா் ஊரடங்கு உத்தரவை மீறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளாா். பெங்களூரில் வாகனங்களில் சென்று ஊரடங்கு உத்தரவை மீறியவா்களை அடையாளம் கண்டு, அவா்கள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன்படி சனிக்கிழமை வரை சுமாா் 33,524 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காடுகோடி போலீஸாா் ஊரடங்கை மீறிய 11 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.