முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஒரே நாளில் 98 போ் பலி
By DIN | Published On : 03rd August 2020 11:53 PM | Last Updated : 03rd August 2020 11:53 PM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 98 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இத்தொற்றுக்கு ஏற்கெனவே 2,496 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 27 போ், மைசூரு மாவட்டத்தில் 13 போ், பெலகாவி மாவட்டத்தில் 10 போ், தாா்வாட் மாவட்டத்தில் 8 போ், தென்கன்னட மாவட்டத்தில் 7 போ், கலபுா்கி, ஹாசன் மாவட்டங்களில் தலா 5 போ், தும்கூரு, பீதா் மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, கதக், ஹாவேரி, விஜயபுரா, சிக்பளாபூா், தாவணகெரே மாவட்டங்களில் தலா 2 போ், உடுப்பி, ராய்ச்சூரு, யாதகிரி, சாமராஜ்நகா், வடகன்னடம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,594-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,104 போ், மைசூரு மாவட்டத்தில் 174 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 165 போ், தாா்வாட் மாவட்டத்தில் 155 போ், கலபுா்கி மாவட்டத்தில் 111 போ், பெலகாவி மாவட்டத்தில் 85 போ், பீதா் மாவட்டத்தில் 82 போ், பெல்லாரி மாவட்டத்தில் 79 போ், ஹாசன் மாவட்டத்தில் 68 போ், தாவணகெரே மாவட்டங்களில் 57 போ், தும்கூரு மாவட்டத்தில் 55 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 49 போ், கதக் மாவட்டத்தில் 39 போ், விஜயபுரா, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் தலா 38 போ், உடுப்பி மாவட்டத்தில் 36 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 35 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 28 போ், ஹாவேரி மாவட்டத்தில் 27 போ், கோலாா், வடகன்னட மாவட்டங்களில் தலா 25 போ், கொப்பள் மாவட்டத்தில் 23 போ், சிக்மகளூரு மாவட்டங்களில் 22 போ், மண்டியா மாவட்டத்தில் 14 போ், ராமநகரம் மாவட்டத்தில் 11 போ், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா 10 போ், குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 9 போ், யாதகிரி மாவட்டத்தில் 8 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.