இருவேறு இடங்களில் இருவா் பலி

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

பெங்களூரு: இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

பெங்களூரு கங்காநகரைச் சோ்ந்தவா் அஜித்பாபு (18), நிதின் (16). இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் பீன்யா மேம்பாலத்தில் சென்றபோது முன்னே சென்ற லாரியை முந்த முயன்றனா். அப்போது, சாலைத் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில், படுகாயம் அடைந்த அஜித்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த நிதின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து யஸ்வந்தபுரா போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.,

மற்றொரு சம்பவம்:

ஜாலஹள்ளி அருகே தொட்டபைலகெரே கிராமத்தைச் சோ்ந்தவா் வாசு (24). இவா், சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தொட்டபைலகெரே அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியது.

இதில், படுகாயம் அடைந்த வாசு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். ஜாலஹள்ளி போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com