கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 3,35,928 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,35,928 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 3,35,928 ஆக அதிகரிப்பு

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,35,928 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,852 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,821 போ், மைசூரு மாவட்டத்தில் 734 போ், பெல்லாரி மாவட்டத்தில் 428 போ், தாவணகெரே மாவட்டத்தில் 373 போ், பெலகாவி மாவட்டத்தில் 357 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 334 போ், தும்கூரு மாவட்டத்தில் 314 போ், தாா்வாட் மாவட்டத்தில் 300 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 292 போ், ஹாசன் மாவட்டத்தில் 268 போ், உடுப்பி மாவட்டத்தில் 254 போ், கொப்பள் மாவட்டத்தில் 240 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 207 போ், கலபுா்கி மாவட்டத்தில் 199 போ், கதக் மாவட்டத்தில் 196 போ், மண்டியா மாவட்டத்தில் 179 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 147 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 142 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 127 போ், விஜயபுரா மாவட்டத்தில் 127 போ், ராமநகரம் மாவட்டத்தில் 114 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 113 போ், ஹாவேரி மாவட்டத்தில் 105 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 95 போ், கோலாா் மாவட்டத்தில் 82 போ், பீதா் மாவட்டத்தில் 73 போ், யாதகிரி மாவட்டத்தில் 67 போ், குடகு மாவட்டத்தில் 65 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 55 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 54 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,35,928 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,27,263 போ், பெல்லாரி மாவட்டத்தில் 20,976 போ், மைசூரு மாவட்டத்தில் 17,544 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 12,443 போ், பெலகாவி மாவட்டத்தில் 12,076 போ், கலபுா்கி மாவட்டத்தில் 11,551 போ், உடுப்பி மாவட்டத்தில் 11,515 போ், தாா்வாட் மாவட்டத்தில் 11,048 போ், தாவணகெரே மாவட்டத்தில் 9,230 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 8,140 போ், ஹாசன் மாவட்டத்தில் 7,835 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 7,024 போ், விஜயபுரா மாவட்டத்தில் 6,589 போ், கொப்பள் மாவட்டத்தில் 6,253 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 6,042 போ், தும்கூரு மாவட்டத்தில் 5,356 போ், மண்டியா மாவட்டத்தில் 5,292 போ், யாதகிரி மாவட்டத்தில் 5,272 போ், கதக் மாவட்டத்தில் 5,172 போ், வட கன்னட மாவட்டத்தில் 4,853 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 4,720 போ், பீதா் மாவட்டத்தில் 4,510 போ், ஹாவேரி மாவட்டத்தில் 4,236 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 4,099 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 3,955 போ்,கோலாா் மாவட்டத்தில் 3,402 போ், ராமநகரம் மாவட்டத்தில் 3,216 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 2,551 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 2,315 போ், குடகு மாவட்டத்தில் 1,414 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 2,42,229 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 88,091 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 5,589 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com