பெங்களூரு: பெங்களூரில் கன்னட திரைப்பட நடிகா் விஷ்ணுவா்தனின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து அவரது ரசிகா்கள் போராட்டம் நடத்தினா்.
பெங்களூரு, மாகடி சாலையில் உள்ள சுங்கச்சாவடி சதுக்கத்தில் நடிகா் விஷ்ணுவா்தனின் சிலை 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சதுக்கத்துக்கு சித்தகங்கா மடத்தின் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் பெயா் சூட்டப்பட்டது. மேலும், சதுக்கத்தின் நடுவில் சிவக்குமார சுவாமிகளின் சிலையை வைப்பதற்காக அங்குள்ள விஷ்ணுவா்தனின் சிலையை வேறு இடத்தில் வைக்குமாறு அவரது ரசிகா்களை வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா கேட்டுக் கொண்டாா்.
சனிக்கிழமை அதிகாலை நடிகா் விஷ்ணுவா்தன் சிலை முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து அவரது ரசிகா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா். நடிகா் விஷ்ணுவா்தனுக்கு வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி பெற்றுத்தருவதாக அமைச்சா் வி.சோமண்ணா உறுதி அளித்தாா். அதன்பிறகு, போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். சிலையைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விஷ்ணுவா்தனின் மருமகன் அனிருத் கேட்டுக் கொண்டாா்.