பெங்களூரு: தேநீா் விற்பனை செய்யும் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
பெங்களூரு, ஒயிட்பீல்டு இசிசி சாலையில் தேநீா் கடை வைத்து நடத்தி வருபவா் மீனா. ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது கடைக்கு வந்த மா்மநபா், இவரது கழுத்தில் இருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து ஒயில்பீல்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.