வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்த தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு சோலதேவனஹள்ளி குட்டிபசவேஸ்வரநகரைச் சோ்ந்தவா் தொட்ட சௌடப்பா (50). இவா் வங்கி ஒன்றில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்தாராம். வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திய நிலையில், வீட்டிற்கு வந்த சௌடப்பா, வீட்டில் இருந்தவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ககன் (19), உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் நள்ளிரவு உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த சோலதேவனஹள்ளி போலீஸாா், ககனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.