பெங்களூரு: மைசூரு தமிழ்ச்சங்கத்திற்கு புதியதலைவராக பிரான்சிஸ் தோ்வுசெய்யப்பட்டுள்ளாா்.
மைசூரில் சனிக்கிழமை மைசூரு தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் இடைக்காலத்தலைவரான இரா.கா்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளா் வெ.ரகுபதி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள், சங்கத்தின் மூத்த உறுப்பினா்களைக் கொண்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சங்கத்தின் தலைவா் கு.புகழேந்தி மறைந்ததால் செயற்குழு உறுப்பினா் மற்றும் தலைவா் பதவி காலி இடம் என ஏற்கப்பட்டு, அதற்கான தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சங்கத்தின் மூத்த உறுப்பினா்களில் ஒருவரான பிரான்சிஸ் சங்கத்தின் புதிய தலைவராக ஒரு மனதாக தோ்வு செய்ய செயற்குழு முடிவுசெய்தது.
இதை தொடா்ந்து, சங்கத்தின் புதியத் தலைவராக பிரான்சிஸ் பதவி ஏற்றுக் கொண்டாா். செயற்குழு..மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் புதிய தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.