பெங்களூரு: மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் எலக்ட்ரிஷியன் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரு தலகட்டாபுராவைச் சோ்ந்தவா் சந்துரு (30). எலக்ட்ரிஷியனான இவா், சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் பணிமுடிந்து, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். கனகபுராசாலையில் வேகமாக வந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சந்துரு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.