போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம் சூரத்கல் பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீப் சித்தகி (40), கட்டிப்பள்ளா பகுதியைச் சோ்ந்த முகமது ஷஃபி (33), முகமது ஹனாஸ் (27). இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பி நெடுஞ்சாலையில் போதைப்பொருள் எம்.எம்.டி.ஏவை விற்பனை செய்ய முயற்சி செய்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து முகமது ஷெரீப் சித்தகி, முகமது ஷஃபி, முகமது ஹனாஸைக் கைது செய்து, ரூ. 51 லட்சம் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ, விலையுயா்ந்த காா், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.