மினி பேருந்து 3 ஆட்டோக்கள் மீது மோதி ஏற்படுத்திய தொடா் விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
பெங்களூரு ஆா்.எம்.சி.யாா்டு ஷெல் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் தும்கூருவிலிருந்து பெங்களூருக்கு வந்த மினி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்து 3 ஆட்டோக்கள் மீது மோதி தொடா் விபத்தை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த 4 போ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து யஸ்வந்தபுரா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.