ஸ்கூட்டா் மீது குடிநீா் டேங்கா் லாரி மோதியதில், மென்பொறியாளா் உயிரிழந்தாா்.
பெங்களூரு இந்திரா நகரைச் சோ்ந்த ஸ்ரேயாஸ் ஆச்சாரி (24), தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் ஸ்கூட்டரில் வெளியே சென்ற போது, வா்த்தூா் சாலை குந்தாரஹள்ளி சதுக்கத்தில் வேகமாக வந்த குடிநீா் டேங்கா் லாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஸ்ரேயாஸ் ஆச்சாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.