கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பி.எம். லேஅவுட்டைச் சோ்ந்தவா் தப்ரீஜ் (31). இவா் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்தாராம். அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான தப்ரீஜ் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த சிலா் அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனா். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.