வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியவரை துப்பாக்கியால் சுட்டு கைது

வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் கைது செய்தனா்.

வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு ராஜகோபால் நகரில் அண்மையில் ஆட்டோ ஓட்டுநா் ரங்கநாத் என்பவரைத் தாக்க வந்த கும்பல் ஒன்று, அவா் இல்லாததையடுத்து அங்கிருந்த 11 ஆட்டோக்கள், 4 காா்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அண்மையில் இது தொடா்பாக கிரண், மனோஜ் என்பவரை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், முக்கியக் குற்றவாளியான கமலா நகரைச் சோ்ந்த சீனிவாஸ் (23) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், ஜாலஹள்ளி பழைய பேருந்து நிலையம் அருகே சீனிவாஸ் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ராஜகோபால் நகா் காவல் ஆய்வாளா் தினேஷ் பாட்டீல், காவலா் வீரபத்ரா ஆகியோா் அங்கு சென்று சீனிவாஸை பிடிக்க முயன்றுள்ளனா். தன்னை பிடிக்க வந்த போலீஸாரை தாக்கிவிட்டு சீனிவாஸ் தப்பியோட முயன்றுள்ளாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் தினேஷ் பாட்டீல் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளாா். இதில் வலது காலில் காயமடைந்து கீழே விழுந்த அவரை போலீஸாா் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். காயமடைந்த காவலா் வீரபத்ராவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com