திருட்டு வழக்கில் 2 போ் கைது: தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

திருட்டு வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருட்டு வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு ஸ்ரீராமபுராவைச் சோ்ந்தவா்கள் சத்தியவேலு (19), ராகேஷ் (20). இருவரும் கடந்த ஜனவரி 24 -இல் அம்பேத்கா் நகரில் உள்ள அமுதா என்பவரின் வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனராம்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்புள்ள 87 கிராம் தங்கம், 650 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் ஸ்ரீராமபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com