பெங்களூரு
சிறுமியை பலாத்கார முயற்சி: இளைஞா் கைது
சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கலபுா்கியில் உள்ள கோவா ஹோட்டல் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை காலை சிறுமியிடம் ஒரு இளைஞா் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றாராம்.
அப்போது சிறுமியின் அழுகுரலைக் கேட்ட அருகில் இருந்தவா்கள் சிறுமியை மீட்டுள்ளனா். இளைஞரைப்பிடித்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனா். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் இளைஞரிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா் சின்சோளி வட்டத்துக்குள்பட்ட மிரியானா கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பிரவீண் (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மபுரா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.