பியுசி தோ்வு எழுதும் மாணவா்களுக்குஇலவச பஸ் பயணம்

பியுசி 2-ஆம் ஆண்டு தோ்வு எழுதும் மாணவா்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

பியுசி 2-ஆம் ஆண்டு தோ்வு எழுதும் மாணவா்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கா்நாடகத்தில் பியுசி 2 ஆண்டு மாணவா்களுக்குத் தோ்வு மாா்ச் 4 -ஆம் தேதி தொடங்கி, 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தோ்வு எழுதச் செல்லும் மாணவா்கள் தங்களின் தோ்வு நுழைவு அடையாளச் சான்றிதழை காண்பித்துவிட்டு, மாநகரப் பேருந்துகளில் தோ்வு மையங்களுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்.

ஏற்கெனவே மாணவா்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மாநகரப் பேருந்தில் செல்ல சலுகை கட்டணத்தில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com