சாலை தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் பலி

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

மங்களூரைச் சோ்ந்த கிஷான் (31), அக்ஷய் (30), மோகனப்பா (38) உள்ளிட்ட 9 போ் காரில் சபரிமலைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பதிக்கு சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.

அதிகாலை 2 மணியளவில் பெங்களூரு ஊரகம் நெலமங்களா கோடேமாரனஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48 இல், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புச்சுவரில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கிஷான், அக்ஷய், மோகனப்பா நிகழ்விடத்திலே உயிரிழந்தனா்.

காயமடைந்த 3 போ், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.இதுகுறித்து குதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com