மங்களூரு: செம்மரக்கட்டைகளைக் கடத்தி வந்து பதுக்கியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து மங்களூருக்கு 4 டன் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்து, பைக்கம்பாடியில் பதுக்கி வைத்திருந்த ஷேக் தப்ராஜ் (36), ஃபரூக் (45), ஹுசைன் (46), ராகேஷ்ஷெட்டி (44), லோஹித் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 4 டன் செம்மரக்கட்டைகள், 2 காா்கள், சரக்கு வாகனம், 7 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பனம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.