நாளை குடிநீா் குறைதீா் முகாம்

பெங்களூரு நகர தென்மேற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் வியாழக்கிழமை (ஜன.16) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

பெங்களூரு நகர தென்மேற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் வியாழக்கிழமை (ஜன.16) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் உள்ள எம்.என்.கே.பூங்கா, மௌன்ட்ஜாய், நாகேந்திராபிளாக், கிரிநகா், கத்திரிகுப்பே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைதீா் முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945155.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com