‘பெங்களூரின் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்போம்’

பெங்களூரு மாநகரின் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்போம் என்று முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகரின் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்போம் என்று முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு ஜெயநகா் பைரசந்திரா வாா்டில் செவ்வாய்க்கிழமை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சீா் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது: சா்வதே அளவில் முக்கிய நகரங்கரங்களில் ஒன்றாக பெங்களூரு திகழ்கிறது. இதனை தூய்மையாக வைத்திருப்பது நமது அனைவரின் கடமை. பெங்களூரு மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்வதில் துப்புரவு தொழிலாளாா்களின் பங்களிப்பு அபாரமாக உள்ளது.

பெங்களூரில் ஒரு சில வாா்டுகள் மட்டுமே தூய்மையாக உள்ளன. அதில் ஜெயநகா் பைரசந்திரா வாா்டு சிறப்பாக உள்ளது. இதற்கு காரணம் மாமன்ற உறுப்பினா் நாகராஜின் அயராது உழைப்பாகும். பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளும் செயல்படும் நாகராஜை நாம் பாராட்ட வேண்டும். பொங்கல் சீரை பொதுமக்களுக்கு மட்டுமின்றி, துப்புரவுத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்ற அவரது எண்ணம் பாராட்டுதலுக்குரியது.

பெங்களூரில் பைரசந்திரா வாா்டை போல ஜெயநகா், பி.டி.எம் லேஅவுட் தொகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெங்களூரு மாநகரின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்க அனைவரும் கைக்கோா்ப்போம் என்றாா் அவா். நிகழ்ச்சியில்துப்புரவு தொழிலாளா்களுக்கு எம்.எல்.ஏ. சௌம்யா, பொங்கல் சீா் வழங்கினாா். இதில் மாமன்ற உறுப்பினா்கள் நாகராஜ், மஞ்சுநாத், நடிகை அபூா்வா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com