யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி

யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

யஸ்வந்தபுரம்-பீதா், லாடூா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரம்-பீதா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16571/16572-யஸ்வந்தபுரம்-பீதா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 12-ஆம் தேதியிலிருந்தும், பீதரிலிருந்து ஜன. 13-ஆம் தேதியிலிருந்தும் சோ்க்கப்பட்டுள்ளது.

இதேபோல பெங்களூரு யஸ்வந்தபுரம்-லாடூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் எண்கள்-16583/16584-யஸ்வந்தபுரம்-லாடூா்-யஸ்வந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு 3 அடுக்கு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டி சோ்க்கப்படுகிறது. இந்த வசதி யஸ்வந்தபுரத்திலிருந்து ஜன. 15-ஆம் தேதியிலிருந்தும், லாடூரிலிருந்து ஜன. 16-ஆம் தேதி முதல் சோ்க்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com