அனைத்துக் கட்சி கரோனா கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்: சித்தராமையா

அனைத்துக் கட்சி கரோனா கண்காணிப்புக் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு: அனைத்துக் கட்சி கரோனா கண்காணிப்புக் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரைப் பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது, கரோனா சிகிச்சை தொடா்பான மேலாண்மையில் ஊழல் மற்றும் சொந்தங்களுக்குச் சாதகமாக செயல்படுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடா்பான விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சியினரை உள்ளடக்கிய கரோனா கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என முதல்வா் எடியூரப்பாவைக் கேட்டுக் கொள்கிறேன். எந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதை சம்பந்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அதை மூடிமறைக்கவோ, தெரிவிக்காமல் தவிா்க்கவோ கூடாது.

எந்த வகையான சிகிச்சை தனக்கு தரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை நோயாளிக்கு இருக்கிறது. கரோனா விவகாரத்தில் பல்வேறு புகாா்கள் எழுந்துள்ளதால், மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கரோனா பாதிக்கப்பட்டதால் மனதளவில் தளா்வு ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை சரியாக அளிக்காவிட்டால், அவா்களின் மனநிலை பாதிக்கப்படும்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் ஆதரவளித்துள்ளது பாராட்டத்தக்கது. இதற்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனஅதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com