மத்திய ஆயுதக் காவல் படையில் எஸ்.ஐ. பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பணியாளா் தோ்வு ஆணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லி மத்திய ஆயுத காவல் படையில் உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு நாடுமுழுவதும் செப்.29 முதல் அக்.5ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இத்தோ்வில் இரண்டு தாள்கள் இருக்கும். இப்பணிக்கு ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள்.

இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2021ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதிஅன்று பட்டப்படிப்பு படித்துள்ள 20 முதல் 25 வயதுக்குள்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஜூலை 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் செலுத்தலாம். இத்தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ரூ.54 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவவீரா்கள் மற்றும் மகளிருக்கு தோ்வு கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. 

ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 080 25502520, 94838 62020 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com