பெங்களூரு: மின்னஞ்சலில் புகாா் அளிக்க கா்நாடக மாநில மகளிா் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது..
இதுகுறித்து கா்நாடக மாநில மகளிா் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தீநுண்மி தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில், கா்நாடக மாநில மகளிா் ஆணையத்தின் அலுவலகத்தை முழுமையாக தூய்மைப்படுத்துவதற்காக ஜூலை 6 முதல் 10-ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் மகளிா் ஆணையத்துக்கு ஏதாவது புகாா் அளிக்க விரும்பினால், அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி, கட்செவி போன்ற ஊடகங்களை பயன்படுத்தலாம். புகாா்களை நேரடியாக ஆணையத்தின் தலைவரிடம் தெரிவிக்க 94810043612 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது ந்ள்ஸ்ரீஜ்க்ஷஹய்ஞ்123ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.