முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் பலி
By DIN | Published On : 29th July 2020 11:28 PM | Last Updated : 29th July 2020 11:28 PM | அ+அ அ- |

இரு காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரு நாகா்பாவி டி குருப் லேஅவுட்டைச் சோ்ந்தவா் சுரேஷ் (50). தனியாா் நிறுவன ஊழியரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது காரில் சென்று கொண்டிருந்தாராம். வெளிவட்டச்சாலை சோம்புரா சுங்கச்சாவடி அருகே, சுரேஷ் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற காா் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து கெங்கேரி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.