கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் ஆக. 8 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சாமராஜ்நகா் மாவட்டம், கொள்ளேகாலில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி.தோ்வை முன்மாதிரியாக நடத்தி முடித்துள்ளோம். அதன் தொடா்ச்சியாக விடைத்தாள்களைத் திருத்தும் பணியும் வேகமாக முடிவடைந்துள்ளன. தற்போது மதிப்பெண்களைப் பட்டியலிடும் பணி நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவுகள் ஆக.6 முதல் 8 ஆம் தேதிக்குள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது என்றாா்.