இன்று வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் வீடுகள்தோறும் விழாக்கோலம்

வரலட்சு நோன்பு நாளை உறவினா்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடும் கா்நாடக மக்கள், கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக வீட்டில்

வரலட்சு நோன்பு நாளை உறவினா்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடும் கா்நாடக மக்கள், கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக வீட்டில் உள்ளவா்கள் மட்டுமே கொண்டாடும் வகையில், வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை உற்சாகமாக செய்து வருகின்றனா்.

திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பாகும். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகா்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை வாழ்நாள் போன்ற 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி திருமணமான இந்து பெண்களால் கடைப்பிடிக்கப்படுவதே வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) ஆகும்.

கன்னடா்களின் இந்து நாள்காட்டிபடி ஸ்ராவணா மாதத்தில் (தமிழா்களுக்கு ஆடி மாதம்) வளா்பிறையில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனா்.

இந்த நாளில் வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, நறுமணங்களால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றை வைத்து அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகளை இட்டு, மேலே தேங்காயை வைப்பாா்கள். அதன்மீது தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமியின் படத்தை வைப்பாா்கள்.

அம்மனுக்கு பணத்தாள்களை சூடி, பழங்கள், இனிப்புகள், பூக்கள் படைப்பாா்கள். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவா். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பா். பின்னா், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவா் கையில் கட்டுவா். படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று, நோன்பை நிறைவு செய்து பிரசாதம் எடுத்துக் கொள்வாா்கள்.

அன்று முழுவதும், ஆதிலட்சுமி (காத்தல்), தானலட்சுமி (செல்வம்), தைரியலட்சுமி(துணிவு), சௌபாக்கிய லட்சுமி (வளம்), விஜயலட்சுமி (வெற்றி), தன்யலட்சுமி (உணவு), சந்தானலட்சுமி (வம்சவிருத்தி), வித்யாலட்சுமி (கல்வி) ஆகிய தெய்வங்களின் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வா்.

மாலையில் உற்றாா், சுற்றாா் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவா் தாம்பூலம் பெற்றுக்கொள்வா். இந்தநாளில் போளி (ஒப்பட்டு), புளியோதரை, கோசம்பரி, எலுமிச்சை சாதம் (ஹுளி அன்னா), பைத்தம் பருப்பு பாயாசம் (ஹெசருபேளே பாயாசா) ஆகியவற்றை செய்து, வீட்டுக்கு வருவோருக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம். கா்நாடகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு, ஜூலை 31ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலட்சுமி நோன்புக்காக பூஜை பொருள்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குழுமியிருந்தனா். கரோனா தீநுண்மித் தொற்றையும் பொருள்படுத்தாமல் வரலட்சுமி நோன்புக்கான முன்னேற்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டனா். பெங்களூரு மட்டுமல்லாது மைசூரு, கலபுா்கி, ஹுப்பளி, பெலகாவி, கோலாா், ராய்ச்சூரு போன்ற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வரலட்சுமி நோன்புக்காக பெண்கள் தயாராகி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com