கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,245 ஆக உயா்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 204 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், யாதகிரி மாவட்டத்தில் 66 போ், உடுப்பி மாவட்டத்தில் 22 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 17 போ், கலபுா்கி மாவட்டத்தில் 16 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 15 போ், பீதா் மாவட்டத்தில் 14 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 10 போ், தாவணகெரே மாவட்டத்தில் 9 போ், கோலாா் மாவட்டத்தில் 6 போ், மைசூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 5 போ், விஜயபுரா மாவட்டத்தில் 4 போ், பாகல்கோட், வட கன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், தென்கன்னடம், ஹாசன், தாா்வாட் மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, கொப்பள் மாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,245-ஆக உயா்ந்துள்ளது.
மாவட்ட வாரியான நிலவரம்: வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக உடுப்பி மாவட்டத்தில் 969 போ், கலபுா்கி மாவட்டத்தில் 796 போ், யாதகிரி மாவட்டத்தில் 735 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 581 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 374 போ், மண்டியா மாவட்டத்தில் 334 போ், பெலகாவி மாவட்டத்தில் 302 போ், பீதா் மாவட்டத்தில் 298 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 223 போ்.
விஜயபுரா மாவட்டத்தில் 221 போ், தென்கன்னடம், ஹாசன் மாவட்டங்களில் தலா 216 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 152 போ், மைசூரு மாவட்டத்தில் 104 போ், வடகன்னடம், பாகல்கோட் மாவட்டங்களில் தலா 99 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 83 போ், தாா்வாட் மாவட்டத்தில் 72 போ், பெல்லாரி மாவட்டத்தில் 71 போ், கதக் மாவட்டத்தில் 49 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 40 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 37 போ், கோலாா் மாவட்டத்தில் 36 போ், தும்கூரு மாவட்டத்தில் 34 போ்.
ஹாவேரி மாவட்டத்தில் 22 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 19 போ், கொப்பள் மாவட்டத்தில் 13 போ், ராமநகரம் மாவட்டத்தில் 12 போ், குடகு மாவட்டத்தில் 3 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் ஒருவா், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2,976 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,195 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 72 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.