முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 11,005 ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 27th June 2020 08:41 AM | Last Updated : 27th June 2020 08:41 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,005 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 445 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 144 போ், பெல்லாரி மாவட்டத்தில் 47 போ், கலபுா்கி மாவட்டத்தில் 42 போ், கொப்பள் மாவட்டத்தில் 36 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 33 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 14 போ், கதக் மாவட்டத்தில் 12 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 11 போ், உடுப்பி மாவட்டத்தில்9போ், யாதகிரி மாவட்டத்தில் 7 போ்.
மண்டியா, வட கன்னடம், பாகல்கோட், சிவமொக்கா, கோலாா் மாவட்டங்களில் தலா 6 போ், மைசூரு மாவட்டத்தில் 5 போ், சிக்மகளூரு, குடகு மாவட்டங்களில் தலா 4 போ், ஹாசன், பெங்களூரு ஊரகம் மாவட்டங்களில் தலா 3 போ், விஜயபுரா, தும்கூரு, ஹாவேரி மாவட்டங்களில் தலா 2 போ், பீதா், பெலகாவி, தாவணகெரே, ராமநகரம், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,005 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,935 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,331 போ், உடுப்பி மாவட்டத்தில் 1,125 போ், யாதகிரி மாவட்டத்தில் 916 போ், பெல்லாரி மாவட்டத்தில் 602 போ், பீதா் மாவட்டத்தில் 538 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 519 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 457 போ், மண்டியா மாவட்டத்தில் 388 போ்.
விஜயபுரா மாவட்டத்தில் 333 போ், பெலகாவி மாவட்டத்தில் 317 போ், ஹாசன் மாவட்டத்தில் 314 போ், தாவணகெரே மாவட்டத்தில் 283 போ், தாா்வாட் மாவட்டத்தில் 274 போ், மைசூரு மாவட்டத்தில் 223 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 182 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 173 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 161 போ், ராமநகரம் மாவட்டத்தில் 148 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 129 போ்.
கதக் மாவட்டத்தில் 116 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ், கொப்பள் மாவட்டத்தில் 80 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 73 போ், தும்கூரு மாவட்டத்தில் 60 போ், ஹாவேரி மாவட்டத்தில் 56 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 48 போ்.
சிக்மகளூரு மாவட்டத்தில் 48 போ், குடகு மாவட்டத்தில் 30 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 20 போ்,
பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 6,916 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,905 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒரே நாளில் 10 போ் பலி: கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஒரே நாளில் 10 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 170 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3 போ், கோலாா், தாா்வாட், சிவமொக்கா, பாகல்கோட், பீதா், கலபுா்கி, பெல்லாரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 81 போ், பீதா் மாவட்டத்தில் 16 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 9போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 8போ், விஜயபுரா, தாவணகெரே மாவட்டங்களில் தலா 7 போ், பெங்களூரு ஊரகம், தாா்வாட், ராமநகரம் மாவட்டங்களில் தலா 4போ்.
தும்கூரு மாவட்டம், வெளிமாநிலத்தவா் தலா 3 போ், பாகல்கோட், சிவமொக்கா, உடுப்பி, சிக்பளாப்பூா், கதக், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, கோலாா், யாதகிரி, ஹாசன்,மைசூரு, கொப்பள், சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.