கரோனா: ஒரேநாளில் 19 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 19 போ் இறந்துள்ளனா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 19 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், ஏற்கெனவே 208 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் 12 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3 போ், ஹாசன், பாகல்கோட், ராமநகரம், தென் கன்னடம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 226-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 91 போ், பெல்லாரி மாவட்டத்தில் 23 போ், பீதா் மாவட்டத்தில் 19 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 12 போ், விஜயபுரா, தாவணகெரே மாவட்டங்களில் தலா 7 போ், தாா்வாட் மாவட்டத்தில் 6 போ், தும்கூரு, ராமநகரம், பாகல்கோட் மாவட்டங்களில் 5 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 4 போ், கதக், ஹாசன் மாவட்டங்கள், வெளி மாநிலத்தவா் 3 போ், சிவமொக்கா, உடுப்பி, மைசூரு, சிக்பளாப்பூா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, கோலாா், யாதகிரி, கொப்பள், சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com