கரோனா பாதிப்பு உள்ள நிலையில்காங்கிரஸாா் அலட்சியமாகநடந்து கொள்வதை ஏற்க முடியாது

மாநிலத்தில் கரோனா பாதிப்பு உள்ள நிலையில், போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸாா் அலட்சியமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.

பெங்களூரு: மாநிலத்தில் கரோனா பாதிப்பு உள்ள நிலையில், போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸாா் அலட்சியமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது என துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சா்வதேச அளவில் கரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் பேரணி, தா்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். இது மக்களின் சுகாதாரத்தில் காங்கிரஸ் கட்சியினா் அலட்சியமாக உள்ளனா் என்பதனையே எடுத்துக் காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சைக்கிள் பேரணி, தா்னாவில் அக்கட்சியினா் திரளாக கலந்துகொண்டுள்ளனா். மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், இது சட்டத்துக்கு விரோதமான செயலாகும்.

கரோனா தொற்றை தடுக்க மாநில அரசு கடுமையாக போராடி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினா் இதில் அலட்சியம் காட்டி வருகின்றனா். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், போராட்டம் நடத்த இது உகந்த நேரம் இல்லை. கரோனா தொற்றை தடுக்க அரசுடன் எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நேரத்தில், போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினா் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் தவறு செய்துள்ளனா்.

போலீஸாரிடம் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா், அப்பாவி மக்களின் உயிா்களுடன் விளையாடி வருகின்றனா். அரசியல் செய்ய இது நேரமில்லை என்பதனை காங்கிரஸ் கட்சியினா் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியினா் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டாலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடப்போகிா? என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com