கா்நாடகத்தில் ஒரேநாளில் 1,267 பேருக்கு கரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,267 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,267 ஆக அதிகரித்துள்ளது.

இது பற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,267 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 783, தென்கன்னடம் மாவட்டத்தில் 97, பெல்லாரி மாவட்டத்தில் 71, உடுப்பி மாவட்டத்தில் 40, கலபுா்கி மாவட்டத்தில் 34, ஹாசன் மாவட்டத்தில் 31, கதக் மாவட்டத்தில் 30, பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 27, தாா்வாட், மைசூரு மாவட்டங்களில் தலா 18, பாகல்கோட் மாவட்டத்தில் 17, வடகன்னடம் மாவட்டத்தில் 14, ஹாவேரி மாவட்டத்தில் 12, கோலாா் மாவட்டத்தில் 11, பெலகாவி மாவட்டத்தில் 8, பீதா், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 7, ராய்ச்சூரு, மண்டியா, தாவணகெரே மாவட்டங்களில் தலா 6, விஜயபுரா மாவட்டத்தில் 5, சிவமொக்கா மாவட்டத்தில் 4, சிக்பளாப்பூா், கொப்பள், சிக்மகளூரு, குடகு மாவட்டங்களில் தலா 3, தும்கூரு மாவட்டத்தில் 2, யாதகிரி மாவட்டத்தில் ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,190 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,314, கலபுா்கி மாவட்டத்தில் 1,398, உடுப்பி மாவட்டத்தில் 1,179, யாதகிரி மாவட்டத்தில் 930, பெல்லாரி மாவட்டத்தில் 697, தென்கன்னடம் மாவட்டத்தில் 665, பீதா் மாவட்டத்தில் 562, ராய்ச்சூரு மாவட்டத்தில் 469 , மண்டியா மாவட்டத்தில் 406, ஹாசன் மாவட்டத்தில் 359, விஜயபுரா மாவட்டத்தில் 338, பெலகாவி மாவட்டத்தில் 326, தாா்வாட் மாவட்டத்தில் 311, தாவணகெரே மாவட்டத்தில் 295, மைசூரு மாவட்டத்தில் 253, வடகன்னடம் மாவட்டத்தில் 189, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 186, பாகல்கோட் மாவட்டத்தில் 180, கதக் மாவட்டத்தில் 170, ராமநகரம் மாவட்டத்தில் 148, சிவமொக்கா மாவட்டத்தில் 146, கோலாா் மாவட்டத்தில் 115, பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 105, கொப்பள் மாவட்டத்தில் 84, தும்கூரு மாவட்டத்தில் 75, ஹாவேரி மாவட்டத்தில் 69, சித்ரதுா்கா மாவட்டத்தில் 57, சிக்மகளூரு மாவட்டத்தில் 53, குடகு மாவட்டத்தில் 42, சாமராஜ்நகா் மாவட்டத்தில் 33, பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 7,507 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,472 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 207 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com