முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
தங்கம் கடத்தல்: 5 போ் கைது
By DIN | Published On : 03rd March 2020 06:39 AM | Last Updated : 03rd March 2020 06:39 AM | அ+அ அ- |

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை பதுக்கி வைத்திருந்ததாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உடுப்பி மாவட்டத்துக்குள்பட்ட குந்தாப்புரா, பைந்தூா் பகுதிகளில் சிலா் சட்டவிரோதமாக் தங்கத்தை வெளிநாடுகளிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்துள்ளனா். இதுகுறித்தத் தகவலின்பேரில் சுங்கத் துறை அலுவலா்கள் போலீஸாருடன் அங்கு சென்று, சோதனை நடத்தினா். அப்போது, பதுக்கி வைத்திருந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 341 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.