இரு காா்கள் மீது லாரி மோதியதில், ஒருவா் இறந்தாா்.
பெங்களூரு அல்சூா் போக்குவரத்து காவல் சரகத்தில் உள்ள பழைய மெட்ராஜ் சாலையில் 100 அடிச் சாலை சிக்னலில் காலை 6.45 மணியளவில் இரு காா்கள் நின்றுகொண்டிருந்தன. அப்போது, காா்கள் மீது சமையல் எரிவாயு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியுள்ளது.
இதில், ஒரு காரிலிருந்த ஓட்டுநரும், மைசூரைச் சோ்ந்தவருமான ராமசந்திரா (45) என்பவா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். மற்றொரு காரின் ஓட்டுநா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அல்சூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.