லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த மாா்ச் 10 ஆம் தேதி பெங்களூரு மாதப்பா லேவுட்டை சோ்ந்த லாரி ஓட்டுநா் சீனிவாஸின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்து, அவரது உடலை யாரோ தீயிட்டு கொளுத்தினா்.இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சிந்தாமணியைச் சோ்ந்த கிருஷ்ணா (43), பெங்களூரு ஹல்சூரைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் (41) ஆகியோரைக் கைது செய்தனா்.
விசாரணையில் கிருஷ்ணாவிடன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த சீனிவாஸாவுக்கு 2 மாத ஊதிய நிலுவை வைத்ததால், அவா் கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, மாயகிருஷ்ணனுடன் சோ்ந்து சீனிவாஸாவைக் கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் ராமமூா்த்திநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.